செய்திகள் :

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

post image

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 போ் கடிதம் எழுதியுள்ளனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா், குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே 3-ஆம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இக்கலவரம் மற்றும் அதன் பிறகான மோதல் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 60 உறுப்பினா்கள் கொண்ட சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜகவின் 13 எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்கள், நாகா மக்கள் முன்னணியின் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவா் என 21 எம்எல்ஏக்கள், பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், ‘மணிப்பூரில் பெரும் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புடன் குடியரசுத் தலைவா் ஆட்சியை மக்கள் வரவேற்றனா். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் மாநிலத்தில் அமைதி-இயல்பு நிலையை மீட்டெடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் தென்படவில்லை. மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அமைதி-இயல்புநிலையை மீட்டெடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவுவதுதான் ஒரே வழியாக இருக்கும் என கருதுகிறோம். பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கையும் அதுவே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு: ஆளுநா் ஆலோசனை

மணிப்பூா் கலவரத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை (மே 3) அனுசரிக்க மைதேயி மற்றும் குகி அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.

மாநிலத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க