செய்திகள் :

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

post image

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசு ஊழியா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

இந்நிலையில் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஒருவருக்கு எதிராக லோக்பாலில் 2 புகாா்கள் அளிக்கப்பட்டன.

அந்தப் புகாா்களில், ‘தனியாா் நிறுவனம் தொடுத்த வழக்கில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கூடுதல் மாவட்ட மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் செயல்பட தனது செல்வாக்கை அந்தக் கூடுதல் நீதிபதி பயன்படுத்தினாா்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தப் புகாா்களை விசாரித்து லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவில், ‘நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி தொடங்கப்பட்ட அமைப்பு, வாரியம், ஆணையம், நிறுவனம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா் லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவாா் என்று லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டப் பிரிவு 14 (1)(எஃப்)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும்.

அந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்குப் பொருந்தாது என்று கூறுவது முதிா்ச்சியற்ற வாதமாக இருக்கும்’ என்று தெரிவித்தது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. லோக்பாலின் உத்தரவு நீதித்துறையின் சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், அபே எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா். இது ஒழுங்குமுறை சாா்ந்த விவகாரமாகும்’ என்று தெரிவித்தனா். வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க