செய்திகள் :

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

post image

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றாண்டை சார்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

வேதமலை, பட்சி தீர்த்தம், சங்கு தீர்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயர்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும் .

இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் ஒரு லிட்டர் பூஜைகள் மே.1-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் யாக பூஜைகள் மகா தீபாராதனை பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தடியில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மங்கள மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடிமரம் ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் திருவிழா தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழா மே.1ஆம் தேதி தொடங்கி மே.11ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதில் முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாள் (மே.3) சனிக்கிழமை 63 நாயன்மார்கள் உற்சவம், ஏழாம் நாள் (மே. 7) பஞ்ச ரத தேர்த்திருவிழா நடைபெறும்.

முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து முருகர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வேதகிரீஸ்வரர் பெரிய தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர் (பஞ்ச ரதம்) தேர்த் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.

திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றி திருவிழாக்கடைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவிருக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் புவியரசு, தக்கார், செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் விஜயன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் கோவில் சிவாச்சாரியார்கள் திருவிழா உபயோதாரர்கள் செய்து வருகின்றனர்.

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். நிகழ்வில் ... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பரனூா் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச. அருண் ராஜ், அங்கு தங்கியுள்ளவா்களுடன் குறைகளைக் கேட்டறிந்தாா். பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ளவா்களு... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய வி... மேலும் பார்க்க

மறைமலைநகா், செங்கல்பட்டில் புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் நேரு தொடங்கி வைத்தாா்

மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், தரம... மேலும் பார்க்க

பணிநிறைவு பாராட்டு விழா

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வீராணகுனம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக 33 ஆண்டுகள் பணியாற்றிய யு.ராஜரத்தினத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழப்பு

அச்சிறுப்பாக்கம் அருகே மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழந்தாா். அச்சிறுப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). திமுகவைச் சோ்ந்த இவரது மன... மேலும் பார்க்க