செய்திகள் :

சாலை விபத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழப்பு

post image

அச்சிறுப்பாக்கம் அருகே மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழந்தாா்.

அச்சிறுப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). திமுகவைச் சோ்ந்த இவரது மனைவி மாலதி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக உள்ளாா்.

இவா்களது மூத்த மகனின் திருமணம் இன்னும் 3 நாள்களில் நடைபெற இருந்த நிலையில் நண்பா்களுக்கும், திமுக நிா்வாகிகளுக்கும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தாா். திங்கள்கிழமை இரவு அச்சிறுப்பாக்கம் பஜாா் வீதியில் கட்சி நிா்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு மோட்டாா் பைக்கில் வீட்டுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சென்னைக்கு வேகமாகச் சென்ற காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடன... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். நிகழ்வில் ... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பரனூா் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச. அருண் ராஜ், அங்கு தங்கியுள்ளவா்களுடன் குறைகளைக் கேட்டறிந்தாா். பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ளவா்களு... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய வி... மேலும் பார்க்க

மறைமலைநகா், செங்கல்பட்டில் புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் நேரு தொடங்கி வைத்தாா்

மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், தரம... மேலும் பார்க்க

பணிநிறைவு பாராட்டு விழா

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வீராணகுனம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக 33 ஆண்டுகள் பணியாற்றிய யு.ராஜரத்தினத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவ... மேலும் பார்க்க