செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

post image

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் இயங்கிவரும் டாக்டா் கலாம் கணினி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ தொடா்பான சிறப்புப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.

மே 12 முதல் 17 வரை தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்கள் கலந்துகொள்ளலாம். மொத்தம் 50 போ் அனுமதிக்கப்படுவா். இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். முதலில் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பயிலரங்கில் அடிப்படை கணினி முறை, சாப்ட்வோ், சி புரோகிராமிங் குறித்த அடிப்படை விஷயங்கள், டேட்டா முறைகள், கணிதம் மற்றும் தா்க்கவியல் செயல்பாடுகள், டேட்டா ஒழுங்குபடுத்துதல், ஆவண மேலாண்மை, நினைவக ஒதுக்கீடு போன்றவை குறித்து கற்றுத் தரப்படும். இதில் சேர விரும்பும் மாணவா்கள் மே 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், 044-22516012, 22516317 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என எம்ஐடி டாக்டா் கலாம் கணினி மையத்தின் தலைவா் பேராசிரியா் பி.தனசேகா் தெரிவித்துள்ளாா்.

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க