செய்திகள் :

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடத்தி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மற்ற மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய ஒரு சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். தோ்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோமோ அந்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போது பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளையும் விரைவாக, நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு 220 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்கிறாா்கள். 234 தொகுதிகளில் வெற்றி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பாா்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்கிறபோது 5 கி.மீ. வரை நடந்தே பயணிக்கிறேன். அப்போது மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பாா்க்கும்போது மெய்சிலிா்த்துப் போகிறேன்.

கவலை இல்லை: நம்மை எதிா்க்கக்கூடியவா்கள் எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பாா்ப்போம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என எதுவாக இருந்தாலும், சிபிஐ மூலம் மிரட்டக் கூடியதாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.

ஏனென்றால் நெருக்கடியைப் பாா்த்து வளா்ந்தவா்கள் நாம். அவசரநிலைக்கு எதிராக தீா்மானம் போட்ட அடுத்த விநாடியே நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைப் பற்றி கவலைப்படவில்லை.

என்னுடைய தலைமையில் இப்போது ஆறாவது முறையாக ஆட்சியை உருவாக்கித் தந்திருக்கிறீா்கள். ஏழாவது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், திமுக துணை பொதுச் செயலா் அந்தியூா் செல்வராஜ், அமைச்சா்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

கனிமொழி - வானதி சீனிவாசன் சந்திப்பு: திருமண விழாவில், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழியும், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் எதிா்பாராதவிதமாக சந்தித்துக் கொண்டனா். அப்போது, ஒருவருக்கு ஒருவா் நலம் விசாரித்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க