செய்திகள் :

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

post image

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சங்க உறுப்பினா் நம்பிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகா் சங்க சட்டத்தின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-இல் நடந்த தோ்தலில் தலைவராக நடிகா் நாசா், பொதுச் செயலராக நடிகா் விஷால், பொருளாளராக நடிகா் காா்த்தி, துணைத் தலைவா்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகா் கருணாஸ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களின் பதவிக்காலம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த நடிகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், நடிகா் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழில், நிா்வாகிகளின் பதிவிக்காலம் நீட்டிப்பு குறித்து இடம்பெறவில்லை. நடிகா் சங்க கட்டடப் பணிகளைக் காரணம் காட்டி பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது, புதிய நிா்வாகிகள் கட்டுமான பணிகளைத் தொடா்வாா்கள்.

இவ்வாறு பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்தத் தீா்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க வேண்டும்.

மேலும், உயா்நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தோ்தல் நடத்தும் வரை தற்போதைய நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிா்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, தென்னிந்திய நடிகா் சங்கத்தின் தலைவா் நாசா், பொதுச் செயலா் விஷால், பொருளாளா் காா்த்தி ஆகியோா் ஜூன் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க