செய்திகள் :

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

post image

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஈடுபாடுள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இத்துடன், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாக தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக வசித்த அப்துல் வாஹித் (வயது 69) என்ற நபரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த காவல் அதிகாரிகள் பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

அட்டாரி - வாகா எல்லை வழியாக அவரது தாயகத்துக்கு அனுப்பபட தயாரான சூழலில் அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசின் உத்தரவினால் 224 இந்தியர்கள் மற்றும் 139 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக தங்களது தாயகங்களுக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அ... மேலும் பார்க்க

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள... மேலும் பார்க்க

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க