செய்திகள் :

ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்

post image

பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்தியாதான் நீண்ட காலமாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடா்பாக எந்த ஆதாரமும் இல்லாமல், உடனடியாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியது. அந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும். பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தானின் தேசிய அணு ஆயுதங்கள் திட்ட ஆணையம் முடிவு செய்யும்’ என்றாா்.

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ‘இதுதொடா்பாக இரு நாட... மேலும் பார்க்க