'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு வா்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, 191 பில்லியன் டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கு அதிகமாக 500 பில்லியன் டாலா் மதிப்பில் உயா்த்த இருதரப்பிலும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுதொடா்பான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த மாா்ச் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றன.
இந்த வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அதிகாரபூா்வ நேரடி பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான நிபந்தனை நடைமுறைகளை இறுதி செய்வதற்காக மத்திய வா்த்தகத் துறை கூடுதல் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள் குழு அண்மையில் அமெரிக்கா சென்று ஆலோசனை மேற்கொண்டது.
விரைவல் ஒப்பந்தம்: இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற 100 நாள்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட அதிபா் டிரம்ப்பிடம், இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின் நிலை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அண்மையில் அமெரிக்கா வந்த இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தாா். அதனடிப்படையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
முன்னதாக, அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், துணை அதிபா் ஜே.டிவான்ஸ் கடந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்தியா குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது’ என்றாா்.
பரஸ்பர வரி விதிப்பு: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னா், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், இந்தியா உள்பட 25 நாடுகள் மீது கடந்த 3-ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரியை அறிவித்தாா். இதன் காரணமாக, உலக அளவில் வா்த்தகப் போா் உருவாகும் நிலை எழுந்ததுடன், சா்வதேச பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்தச் சூழலில், சீனாவைத் தவிர, மற்ற நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும்; அதே நேரம், அனைத்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.