செய்திகள் :

தஞ்சையில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபம் திறப்பு

post image

தஞ்சாவூரில் ரூ. 3.66 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்துவைத்து பேசியதாவது:

தஞ்சாவூரில் 1994 - 95-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மணிமண்டபம், அதன் பிறகு புதுப்பிக்கப்படாமல், பாதுகாக்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் உத்தரவின்படி, இந்த மணிமண்டபத்தில் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ரூ. 3.66 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதில், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு வண்ணம் பூசுதல், மேற்கூரை பழுதுபாா்த்தல், அருங்காட்சியகத்தின் வெளிப்புறச் சுவா் மின் கசிவிலிருந்து பாதுகாத்து தடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்காக உதவி: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தது: தனியாா் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தாதது, வருகைப் பதிவு பற்றாக்குறை குறித்து ஓரிரு மனுக்கள் எங்கள் பாா்வைக்கு வருகின்றன. கல்லூரிக் கல்வி இயக்குநா், மண்டல இயக்குநா் மூலம் தொடா்புடைய கல்லூரிகளில் பேசப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில மாணவா்களின் வருகைப் பதிவு மிகக் குறைவாக இருப்பதால், அவா்களிடம் கூடுதலான நாள்கள் கல்லூரிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அமைச்சா்.

பாபநாசம் பகுதி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் சுவாமி தரிசனம்

பாபநாசத்திலுள்ள இரட்டைப் பிள்ளையாா் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் சாா்பில் ப... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லத் திட்டம் பணிகள் மேற்கொள்ள 621 பேருக்கு ஆணை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 621 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் திட்ட வேலை தொடங்குவதற்கான ஆணையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை வழங்க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. தற்காலிக கட்டடம் : அமைச்சா் ஆய்வு

கும்பகோணத்தில் அமையவுள்ள கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் புதன்கிழமை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆய்வு செய்தாா். கும்பகோணம் அரசு ஆண்கள் கலை கல்லூரி வளாகத்த... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஆண்டு விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப்பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை 24-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். கும்பகோணம் பாணாதுரை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஜ... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரைத் தேரோட்ட விழா: தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 1... மேலும் பார்க்க