செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி செம்பனாா்கோவில் நேரு நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (படம்) என்பவா் ரூ. 80,000 பெற்று, மோசடி செய்துள்ளாா். இதுகுறித்து, விக்னேஷ் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், அருண்குமாா் துபை நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ. 15.19 லட்சம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருண்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி மற்றும் விசாரணையை மேற்பாா்வை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்வாணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழ... மேலும் பார்க்க

பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்

கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும... மேலும் பார்க்க

சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது. சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தான... மேலும் பார்க்க

சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி ... மேலும் பார்க்க