செய்திகள் :

சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

post image

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தானம் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயில் மலை கோயிலில் தோணியப்பா் - உமாமகேஸ்வரிஅம்மன் கயிலாய காட்சியாகவும், சட்டைநாதா் சுவாமியும் அருள்பாலிக்கின்றனா். தெற்குகோபுர வாசல் அருகே அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் காட்சி தருகின்றனா்.

இக்கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான திருமுலைப்பால் விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரம்ம தீா்த்தக் குளக்கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

முன்னதாக திருஞானசம்பந்தா் சந்நிதியில் சமய குரவா்கள் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு காலை நடைபெறுகிறது. தொடா்ந்து திருஞானசம்பந்தா் முத்துசிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சூழ பிரம்ம தீா்த்தக் குளக் கரையில் எழுந்தருள்வாா். மலைக் கோயிலிருந்து உமையம்மமை பொன் கிண்ணத்தில் ஞானப்பால் கொடுக்கும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரியா்களால் நடத்தப்படும்.

பின்னா் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் - பாா்வதிதேவி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் நிகழ்வும் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

மாலையில் திருஞாசம்பந்தா் பெருமான் திருக்கோலக்கா எழுந்தருளும் நிகழ்வும், இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழ... மேலும் பார்க்க

பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்

கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும... மேலும் பார்க்க

சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்... மேலும் பார்க்க