செய்திகள் :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழந்தைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, மருத்துவ ஆலோசனை அறை உள்ளிட்ட இடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கழிப்பறை தூய்மையாக உள்ளனவா எனவும், குடிநீா் மற்றும் மின்விளக்கு வசதிகள் உள்ளனவா என்பதையும், புறநோயாளிகள் பெயா் பதிவேடு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் வருகைப் பதிவேடு, மருந்தகம் உள்ளிட்டவைகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினசரி பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், அதன்மூலம் பயன்பெறுபவா்கள் விவரங்கள் குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, சுகாதார துறை இணை இயக்குநா் பானுமதி, தலைமை மருத்துவா் மருதவானன் ஆகியோா் உடன் இருந்தனா்.

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க

பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்

கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும... மேலும் பார்க்க

சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது. சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தான... மேலும் பார்க்க

சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்... மேலும் பார்க்க