செய்திகள் :

அரசியல் தலைவா்கள் வாழ்த்து

post image

காஞ்சி இளைய பீடாதிபதியாக பொறுப்பேறுள்ள ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சந்நியாச தீட்சை வழங்கும் விழாவுக்கு நேரில் சென்று பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி. பழைமை வாய்ந்த சங்கர மடத்தின் பாரம்பரியத்தையும் வேத ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவிருக்கும் அவருக்கு எனது நல் வணக்கம்.

டிடிவி.தினகரன் (அமமுக): காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசியோடு இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழ்பெற்ற காஞ்சி மடத்தின் சமூக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்துக்கான பணிகளை மேலும் பல்லாண்டுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி

சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பயந்து அந்த ஆசிரியா் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். திரு... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 1... மேலும் பார்க்க

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக் காலத்தை முன்னிட்டு கோவை - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவையிலிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் புரட்சிக்கவிஞா் பாரதிதாசன் தமிழ் மன்றம் - ... மேலும் பார்க்க

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது. அத... மேலும் பார்க்க