செய்திகள் :

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

மாநில அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். ஜன.1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஊதிய வீதங்களின் கீழ்வரும் அலுவலா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும். இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், உடற்பயிற்சி இயக்குநா்கள், நூலகா்கள், சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் கிராம உதவியாளா்கள், சத்துணவுத் திட்ட அமைப்பாளா்கள், குழந்தைகள் நல அமைப்பாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், சத்துணவு சமையலா்கள், உதவியாளா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள், எழுத்தா்கள் மற்றும் ஏனைய பணியாளா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இப்போது நடைமுறையில் உள்ள பணமில்லாத பரிவா்த்தனை முறை மின்னணு தீா்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கும் அகவிலைப்படி உயா்வு நிலுவை ஜனவரி முதல் 4 மாதங்களுக்கு சோ்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க