செய்திகள் :

Pegasus Spy: ``மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு?'' - உச்ச நீதிமன்றம்

post image

2021-ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இஸ்ரேலில் இருந்து பெகசாஸ் என்னும் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற புகார்கள் எழுந்து பூகம்பம் கிளம்பியது.

இதுக்குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் விசாரித்தனர்.

பெகாசஸ் ஸ்பைவேர்
பெகாசஸ் ஸ்பைவேர்

அப்போது, இந்த வழக்கு குறித்து அவர்கள் கூறியதாவது,

"நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த எந்த அறிக்கையையும் நீதிமன்றம் வெளியிடாது. ஒருவேளை, அது தனிப்பட்ட மனிதர்களின் உரிமையை மீறுவதாக இருந்தால் தான் நீதிமன்றம் தலையிடும்.

உளவு மென்பொருள் அரசிடம் இருந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.

(தேச விரோத சக்திகளுக்கு எதிராக) நாடு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு? உளவு மென்பொருளை வைத்திருப்பது தவறு அல்ல. அதை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்வி.

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யவும், தியாகம் செய்யவும் முடியாது. தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட்டுள்ளது".

இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 30-ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

``அடுத்த 24 - 36 மணிநேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தலாம்..'' - பாகிஸ்தான் அமைச்சர் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவு மிக மோசமடைந்து வருகிறது. இதனால், 'இன்னொரு போர் உலகில் உண்டாகிவிடுமோ?' என்று உலகமே அச்சத்தில் உள்ளது. நேற்று, பிரத... மேலும் பார்க்க

Vijay : ``என் வண்டி மேல ஏறி குதிக்காதீங்க!'' - தொண்டர்களுக்கு விஜய் கட்டளை!

'கோயம்புத்தூர் பூத் கமிட்டி கூட்டம்!'கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தவெகவின் பூத் கமிட்டி கூட்டத்தை கோயம்புத்தூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தியிருந்தார். விஜய்யை வரவேற்க விமான நிலையத்திலும், அவர் ர... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவ... மேலும் பார்க்க

Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

கனடா நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று கனட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிற... மேலும் பார்க்க

`கண் வறட்சி முதல் வன்முறை வரை.. மொபைல் போனின் நெகட்டிவ் பக்கங்கள்!' - பெற்றோர்களே கவனம்!

டெக்னாலஜி வளர்ந்துகொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கையிலும் முழு நேரமும் மொபைல் போன் இருக்கிறது. பெற்றோர்களுடனும், சக குழந்தைகளுடனும் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு முழு நேரமும் டிவி, மொ... மேலும் பார்க்க