செய்திகள் :

பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவு!

post image

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரித்துள்ளார்.

தாணேவில் நிகழ்ந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பிறகு சரத் பவார் செய்தியாளர்களுடன் பேசினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதை நாட்டின் மீதான தாக்குதல் என்றே கருதப்படுகிறது. இந்தப் பிரச்னையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றமும் ஒன்றுபட்டுள்ளன.

இந்தச் செய்தியை உலகிற்கு அனுப்ப, பஹல்காம் பற்றிய ஒரு சிறப்பு அமர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று பவார் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்கவும், கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்தவும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஏப்ரல் 22 அன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பஹல்காம் அருகேயுள்ள புல்வெளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவார்.

புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்திய அரசியலமைப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ரஷிய பயணம் ரத்து!

பிரதமர் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 - 45 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன... மேலும் பார்க்க

இடிந்த கோயில் சுவரின் கட்டுமானத்தில் ஊழல்: மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

விசாகப்பட்டினத்தில் இடிந்து விபத்தான சுவரின் கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

நாட்டின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கெச், ஜியாரத் மாகாணத்தில் தீவிரவாதிகள் இருப்பத... மேலும் பார்க்க

பஹல்காம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவர் அலோக் ஜோஷி!

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

57 முறை பணியிடமாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வு!

34 ஆண்டுகள் பணிக் காலத்தில் 57 முறை பணியிட மாறுதலுக்கு உள்ளான ஹரியாணா மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடாத 1991ஆம்... மேலும் பார்க்க