செய்திகள் :

இடிந்த கோயில் சுவரின் கட்டுமானத்தில் ஊழல்: மார்க்சிய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

post image

விசாகப்பட்டினத்தில் இடிந்து விபத்தான சுவரின் கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் இடிந்து விழுந்து விபத்தானதில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களுக்கு நிதி உதவியாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்குமாறு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, கோயில் சுவர் இடிந்த விபத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். அவர்களில் கணவர், மனைவி இருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருந்தனர். தற்போது, எங்கள் குடும்பத்துக்கு நீதி வேண்டும். தூண் இல்லாமல் சுவரை எப்படி எழுப்ப முடியும்? என்று கட்டுமானத்தின் ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளரிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறான மோசமான கட்டுமானத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். தற்போது, எங்கள் குடும்பத்தின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் அரசு அறிவிக்க வேண்டும். அரசு அறிவிக்கவில்லையெனில், பலியானவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, இடிந்து விபத்தினை ஏற்படுத்திய சுவரின் கட்டுமானத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டிருக்கின்றனர் என்று மாநில அரசை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இந்த விபத்துக்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்று கூறியதுடன், கட்டுமானத்தில் லட்சக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவத்தில் இறைவனின் நிஜரூப தரிசனத்தைக் காண புதன்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்த நிலையில், இரவு முழுவதும் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கோயில் சுவர் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அம்மாநில அரசும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க

அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார். ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு ந... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க