செய்திகள் :

ரூ. 18 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா?

post image

நடிகை நயன்தாரா தெலுங்கு படமொன்றில் நடிக்க தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆண்டிற்கு 3 படங்களிலாவது நடித்துவிடுகிறார். அதில், உச்ச நட்சத்திர நடிகர்கள் படங்களும் அடக்கம்.

தமிழைத் தாண்டி இந்தியளவிலும் பெரிய படங்களில் நாயகியாக நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, இவர் நடித்துமுடித்த டியர் ஸ்டூடன்ஸ், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை அணுகியதாகவும் நடிக்க ஒப்புக்கொண்ட நயன் சம்பளமாக ரூ. 18 கோடி கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சூப்பர் ஸ்டாரா? அஜித் அளித்த பதில்!

அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!

மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட... மேலும் பார்க்க

பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!

உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும் என்பது குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். இதில், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போ... மேலும் பார்க்க

30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.தொ... மேலும் பார்க்க

முழுக்க முழுக்க ஏஐ! கவனம் ஈர்க்கும் கன்னட திரைப்படம்!

முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான கன்னட திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்தபின் எல்லாத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுழைப்பு அதிகம் தே... மேலும் பார்க்க

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்த... மேலும் பார்க்க