செய்திகள் :

கொல்கத்தா - தில்லி போட்டி: கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் காயம்!

post image

கொல்கத்தா - தில்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையிலான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தின் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பொறுப்பு கேப்டன் சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

18 வது ஓவரின்போது மிட் விக்கெட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த தில்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் கையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதற்கிடையில், கொல்கத்தா அணியின் கேப்டனான ரஹானேவுக்கும் ஷார்ட் கவரில் பீல்டிங் செய்யும் போது கையில் அடி விழுந்தது. அதன் பிறகு அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சுனில் நரைன் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் கூறுகையில், “ரஹானேவுக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவை இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமாகும்” என்றும் தெரிவித்தார்.

தில்லி அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

இதையும் படிக்க:சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகல்! பஞ்சாபுக்கு பின்னடைவா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீதமுள்ள போட்டிகளில் விலகுவதாக தெரிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிபடுத்திய... மேலும் பார்க்க

சிஎஸ்கே பேட்டிங்: அணியில் எந்த மாற்றமும் இல்லை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ்... மேலும் பார்க்க

வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் மதன் லால் திறமையானவர்தான் ஆனால் ஒழுக்கம் தேவை எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் (14) சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்... மேலும் பார்க்க

சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!

ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளி... மேலும் பார்க்க

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க