செய்திகள் :

வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!

post image

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் மதன் லால் திறமையானவர்தான் ஆனால் ஒழுக்கம் தேவை எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் (14) சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் நிகழ்த்தினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இந்தச் சாதனையைப் பாராட்டும் விதமாக பிகார் முதல்வர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை அளித்தார்.

இந்தமாதிரி ஒரு சிறுவனைப் பார்த்ததே இல்லை

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசியதாவது:

வைபவ் சூர்யவன்ஷி மிகவும் திறமையானவர். ஆனால், திறமை மட்டுமே வெற்றியைக் கொடுத்துவிடாது.

அவர் கவனமாக, ஒழுக்கமாக, கடினமாக உழைக்க வேண்டும். அவரது செயல்பாடுகள் சரியான வழியில் இருந்தால் பல உயரங்களை அடையலாம்.

நான் இந்தமாதிரி ஒரு சிறுவனைப் பார்த்ததே இல்லை. நான் தில்லிக்கு கேப்டானக இருக்கும்போது ரஞ்சி கோப்பையில் சச்சின் சிறிய வயதில் எங்களுக்கு எதிராக 80 ரன்கள் குவித்தார்.

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்

சச்சினுக்கு அடுத்தாக விராட் கோலி வந்தார். இன்னமும் விளையாடி வருகிறார். தற்போது, அனைவரும் சூர்யவன்ஷியைக் குறித்துப் பேசுகிறார்கள். சூப்பர்ஸ்டாராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது.

சூர்யவன்ஷி பேட்டிங் ஆடும் விதம் கடவுள் கொடுத்த வரம். ஆனால், இதை எப்படி பயன்படுத்துவது என்பது அவரிடம்தான் இருக்கிறது. இதில் அவரது நேர்மை, ஒழுக்கம், வளர்ப்பு என எல்லாமே அடங்கியிருக்கிறது. குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது. குடும்பத்தினர் ஆதரவாக இருக்கும்போது அது கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

முடிந்த அளவுக்கு உள்ளூர் போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும். வித்தியாசமான சூழ்நிலைகளில் வெவ்வேறு எதிரணிகளுடன் விளையாடினால் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகல்! பஞ்சாபுக்கு பின்னடைவா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீதமுள்ள போட்டிகளில் விலகுவதாக தெரிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிபடுத்திய... மேலும் பார்க்க

சிஎஸ்கே பேட்டிங்: அணியில் எந்த மாற்றமும் இல்லை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ்... மேலும் பார்க்க

கொல்கத்தா - தில்லி போட்டி: கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் காயம்!

கொல்கத்தா - தில்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையில... மேலும் பார்க்க

சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!

ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளி... மேலும் பார்க்க

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க