செய்திகள் :

மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!

post image

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கமானது, நாடு முழுவதும் மே 1, 2025 முதல் பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

லிட்டருக்கு ரூ. 2 உயர்வு என்பது அதிகபட்ச சில்லறை விலையில் 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர்வுக்கு வழிவகுக்கும். இது சராசரி உணவு பணவீக்கத்தை விட மிகக் குறைவு.

இதனிடையில், ஜூன் 2024 முதல் பாக்கெட் பாலின் விலையை அதிகரிக்கவில்லை என்று சுற்றுக்காட்டியுள்ள அமுல் நிறுவனம், 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

நாடு முழுவதும் நாளை முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும்.

'சக்தி' வகையின் 500 மில்லி பாக்கெட் பால் ரூ.31-க்கும், 500 மில்லி பசும்பால் பாக்கெட் ரூ.29 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப் பால் பாக்கெட் ரூ.73 ஆகவும், ஒரு லிட்டர் 'டாசா' பாக்கெட் ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

இதையும் படிக்க: பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!

கடன் வட்டியைக் குறைத்த எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வலு சோ்ப்பதாகக் கூறி பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதன் எதிரொலியாக, அவா் பதவியேற்ற்குப் பிந்தைய முத... மேலும் பார்க்க

பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!

சண்டீகா்: தானிய சந்தைகளிலிருந்து 114 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில், இதுவரை 111 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் லால் சந்த் இன்று தெ... மேலும் பார்க்க

4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!

புதுதில்லி: என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்த... மேலும் பார்க்க

அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!

புதுதில்லி: அட்சய திருதியை நாளை முன்னிட்டு மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்க நகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் 8,980-க்கும், ஒரு ச... மேலும் பார்க்க

மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

மே மாதத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மீ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.... மேலும் பார்க்க