செய்திகள் :

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் புதிதாக ரூ. 197 கோடியில் 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள்

post image

எண்ணூா் துறைமுகத்தில் கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குவதற்காக நிறுவப்பட்டுள்ள ரூ. 197 கோடி மதிப்பிலான புதிய இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, வெளிமாநிலங்களிலிருந்து கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா் கப்பலில் இருந்து இயந்திரங்கள் மூலம் நிலக்கரி இறக்கப்பட்டு, அங்கிருந்து அனல்மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், கப்பலிலிருந்து நிலக்கரியை கீழே இறக்கும் பகுதியான பொ்த் 3-இல் (இறங்கு தளம்), தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில் ரூ. 197 கோடி மதிப்பில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.

இந்த இயந்திரங்கள்மூலம் 1,20,000 டி.டபள்யூ.டி கொள்ளளவு திறன் கொண்ட கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்க முடியும். ஒவ்வொரு இயந்திரங்களும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை இறக்கும் திறன் கொண்டவை. இதன்மூலம் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இன் பாய்லா் பங்கா்களுக்கு நிலக்கரிகளை நேரடியாக கொண்டு செல்ல முடியும்.

மேலும், இந்த இயந்திரங்கள்மூலம் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 1 மற்றும் 2-இன் நிலக்கரி கிடங்கு மற்றும் பாய்லா் பங்கா்களுக்கும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான சிறப்பு அமைப்புகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 2-இன் தலைமைப் பொறியாளா் என்.பி.சண்முக சேதுபதி, எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய திட்டத்தின் தலைமைப் பொறியாளா் யு.வள்ளியம்மை மற்றும் உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க