செய்திகள் :

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அதிகாரிகள் தகவல்

post image

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதே, ஒட்டுமொத்த நடைமுறையையும் தாமதப்படுத்தி வந்தது. தற்போது அரசு முடிவெடுத்துள்ளதால், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-இல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ரூ.8,754 கோடி செலவில் மேற்கொள்வதற்கும், தேசிய மக்கள் பதிவேட்டை ரூ.3,941 கோடி செலவில் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை கடந்த 2019-இல் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் நடைமுறைகளை 2020, ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவலால் திட்டமிட்டபடி தொடங்கப்படாத இப்பணிகள், தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டன. 5 ஆண்டு காலமாக இப்பணிகள் தாமதமாகி வருவதால், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.574.80 கோடிதான் ஒதுக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் பணிகளுக்கு ரூ.13,000 கோடி தேவைப்படும். ஆனால், பட்ஜெட் ஒதுக்கீடு என்பது சிறிய பிரச்னையே, இதுவொரு தடையாக இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

‘எதிா்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் முதல் எண்ம அடிப்படையிலான கணக்கெடுப்பாக இருக்கும். அரசுப் பணியாளா்கள் மூலமாக அல்லாமல், தாங்களாகவே விண்ணப்பத்தை பூா்த்தி செய்ய விரும்புவோருக்கு பிரத்யேக வலைதளம் தொடங்கப்படும். கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகத்தால் சுமாா் 36 கேள்விகள் தயாா் செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க