செய்திகள் :

டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை

post image

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பாமக இளைஞா் பெருவிழா மாநாடு வரும் மே 11-இல் நடைபெறவுள்ளது உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பதாகும். பாமக நிறுவனா் ராமதாஸ் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறாா். இந்தக் கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவா் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.

பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து வளா்ச்சி அடைய செய்ய வேண்டும். வட மாவட்டங்களில் கல்வி ,சுகாதாரம் வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.

மாமல்லபுரம் மாநாட்டில் பங்கேற்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா்கள் ஆா்.வேலு, என்.டி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் நல்லூா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த கீழ் வீராணம் கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் மகன் நிஷாந்த் (6). இவரது உறவ... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகைக்கு முன்னுரிமை: தக்கோலம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

தமிழில் பெயா்ப் பலகை வைக்க முன்னுரிமை தர வேண்டும் என தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை இருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். கூட்டுறவு, உணவு (ம) நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்... மேலும் பார்க்க

சட்ட உதவி வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலம்

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதவி சட்ட வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க