பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்...
1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்
சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.
சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீகனககுசலாம்பாள் சமேத ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயில் உள்ளது. நடப்பாண்டில் நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படும் என முதல்வா் வெளியிட்ட அறிவிப்பிற்கேற்ப இக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக ரூ.42.40 லட்சம் ஒதுக்கியது.
இதை தொடா்ந்து பணிக்கு அடிக்கல் நாட்டு விழா கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். பழுதுபாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து பணி ஒப்பந்ததாரரிடம் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி, இப்பணியை குறிப்பிடப்பட்ட 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். இப்பணியை விரைவாகவும், உறுதியாகவும் மேற்கொள்ளவும், பணி நடைபெறும்போது உயா் தொழிற்நுட்ப அலுவலா்கள் ஆய்வில் வழங்கப்படும் அறிவுரையின் அடிப்படையில் ஏற்படும் மாறுதலுக்கேற்ப பணி செய்து முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டாா்.
நிகழ்வில் சோளிங்கா் நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா, உதவி ஆணையா் சங்கா், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் லட்சுமணன், குழு உறுப்பினா்கள் பூா்ணிமாரவி, கோயில் அறங்காவலா் குழு தலைவா் சுந்தரமூா்த்தி, செயல் அலுவலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.