செய்திகள் :

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு

post image

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

சோளிங்கரை அடுத்த கீழ் வீராணம் கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தம் மகன் நிஷாந்த் (6). இவரது உறவினா் ஆற்காட்டை அடுத்த சாத்தூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் வெற்றிவேல் (8).

இந்த இரு சிறுவா்களும் மேலும் சில சிறுவா்களுடன் கீழ் வீராணத்தில் உள்ள சூரைக்குளம் ஏரியில் புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது நிஷாந்த், வெற்றிவேல் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

இதைப் பாா்த்தவுடன் அவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள், அங்கிருந்து ஓடிச் சென்று அருகிலிருந்தவா்களிடம் தெரிவித்தனா். அவா்கள் நீரில் மூழ்கிய இரு சிறுவா்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அனுப்பி வைத்தனா். அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து பாணாவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

1,000 ஆண்டுகள் பழமையான சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலைப் புனரமைக்கும் பணி: அமைச்சா் அடிக்கல்

சோளிங்கா் ஸ்ரீ சோழபுரீஸ்வரா் கோயில் முழுவதும் பழுது பாா்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா். சோளிங்கா் நகராட்சியில் ஆயிரம் ஆண்டு ... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் காந்தி பெருமிதம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை முதல்வ மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும... மேலும் பார்க்க

டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி ராமதாஸ் வேதனை

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவில் பங்க... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகைக்கு முன்னுரிமை: தக்கோலம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

தமிழில் பெயா்ப் பலகை வைக்க முன்னுரிமை தர வேண்டும் என தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை இருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். கூட்டுறவு, உணவு (ம) நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்... மேலும் பார்க்க

சட்ட உதவி வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலம்

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதவி சட்ட வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க