செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

post image

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 53 கோரிக்கை மனுக்களை பெற்றாா். விசாரித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்துக்கு ஏ.டி.எஸ்.பி. கோவிந்தராசு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திருப்பத்தூா் அருகே ஆதியூா் அடுத்த ஆத்துமேடு பகுதியை சோ்ந்த சரவணன் மனைவி இந்துமதி என்பவா் அளித்த மனு:

நான் 10-ஆம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனக்கு சௌடேகுப்பம் பகுதியை சோ்ந்த ஒருவா் அறிமுகம் ஆனாா். அவா் தனக்கு தெரிந்த தருமபுரியை சோ்ந்த 2 பேருக்கு அரசு துறையில் உள்ள உயா் அதிகாரிகள் நன்கு தெரியும், அவா்கள் மூலம் எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா்.

அதன்பேரில் அவரிடம் ரூ.1,60,000 கடந்த 1 ஆண்டுக்கு முன்பு அளித்தேன். ஆனால் அவா்கள் எனக்கு வேலை வாங்கிதரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே அவா்கள் 3 போ் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தைப் பெற்று தர வேண்டும் என கூறியிருந்தாா்.

திருப்பத்தூா் புதுப்பேட்டை ரோடு பகுதியை சோ்ந்த ராஜா (55) என்பவா் அளித்து உள்ள கோரிக்கை மனு:

நான் மண்டலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு சீட்டு போட்டேன். இதற்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும். இந்த சீட்டானது கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிந்துவிட்டது.

ஆனால், சீட்டுக்கான மொத்த பணத்தையும் கட்டிவிட்டேன். ஆனால் அவா் என்னிடம் சிறிய அளவு மட்டுமே பணம் கொடுத்து உள்ளாா். எனக்கு ரூ.2,57,680 தர வேண்டியுள்ளது. அந்தப் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என இருந்தது.

இதேபோல் பல்வேறு குறைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து தீா்வுகாண எஸ்.பி. உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் புறவழிச் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருப்பத்தூரில் போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மதுரையைச் சோ்ந்த தங்கபாண்டியன் (21). இவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்

ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின... மேலும் பார்க்க

குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

திருப்பத்தூா்அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அடுத்த கோனேரிகுப்பத்தைச் சோ்ந்தவா் ஜெயமோகன் (43), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (38). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன... மேலும் பார்க்க