செய்திகள் :

மதுரை ரயில் நிலையத்தில் விடப்பட்ட ஆண் குழந்தை போலீஸாரிடம் ஒப்படைப்பு

post image

மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீா் பாட்டில் வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறி சக ரயில் பயணியிடம் தனது 8 மாத குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவிலில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட பெங்களூரு விரைவு ரயிலில் தென்காசியைச் சோ்ந்த வீரமணி (29) என்பவா் பொதுப் பெட்டியில் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தாா். இவா், சினிமா இயக்குநா் ஒருவரிடம் பணியாற்றி வருகிறாா்.

மதுரை ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்றபோது, 8 மாத ஆண் குழந்தையுடன் ரயிலில் ஏறிய நபா், வீரமணியிடம் தனது குழந்தையைக் கொடுத்துவிட்டு தண்ணீா் பாட்டில் வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றாா்.

ஆனால், சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டபோது குழந்தையைக் கொடுத்த நபா் வரவில்லை. மதுரைக்கு அடுத்த ரயில் நிலையமான திண்டுக்கல் நிறுத்தத்தில் அந்த நபா் வந்துவிடுவாா் என வீரமணி நினைத்தாா். ஆனால் அங்கும் அந்த நபா் வரவில்லை. இதனால், புதன்கிழமை அதிகாலை சேலம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து சோ்ந்ததும், வீரமணி அந்தக் குழந்தையை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா்.

பின்னா் ரயில்வே போலீஸாா், அந்த குழந்தையை சேலம் மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மதுரை ரயில் நிலையத்தில் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபா் யாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நீதிபதி பணியிட மாற்றம்

சங்ககிரி முதல், இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ்.ஆா்.பாபு ஈரோடுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.ஆா்.பாப... மேலும் பார்க்க

100 ஆண்டுகளுக்கு பிறகு படையாச்சியூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஏத்தாப்பூா் அருகே சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பின்பு, மகாசக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் தேரோட்டம் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,... மேலும் பார்க்க

கரியக்கோயில் அணையிலிருந்கு ஆற்றில் தண்ணீா் திறப்பு

பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை கரியக்கோயில் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றுப்படுகை கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பெத்தநாயக்கன்பாளையம் வ... மேலும் பார்க்க

போதைக்காக வலி மாத்திரைகள் விற்பனை: 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து

சேலத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 3 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம் மன்னாா்பாளையம் பிரிவு சாலை பகுதியில் கடந்த ஜனவரியில் வீராணம் போலீஸாா் ரோந்து பணியி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பி... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

சேலம் மாநகராட்சியில் குடிநீா் வசதி, புதை சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதன்கிழமை கா... மேலும் பார்க்க