செய்திகள் :

ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

post image

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது.

5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணா்தல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாணவா்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையிலும், மாணவா்களின் கலைத்திறனை வளா்க்கும் விதமாகவும் மே 1 முதல் 12-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோவை மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பரதம், சிலம்பம், யோகா, ஓவியம், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரதம், சிலம்பம், குரலிசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சி நிறைவு நாளில் மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 97515 28188 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றும் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சி.நீலமேகன் தெரிவித்துள்ளாா்.

கஞ்சா விற்ற இருவா் கைது

கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். செல்வபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செல்வபுரம் வேடப்பட்டி சாலையில் சந்தேகப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்தவா் கைது

பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், சூலூா் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் வேலம்மாள் (77). இவா், கோவை ... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்புக் கூட்டம்

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கவன ஈா்ப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா். கோவை ஒண்டிப்புதூா் சூா்யா நகா் பகுதியை ஒட்டியுள்ள சிவலிங்கபுரம்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை துடியலூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துடியலூா் போலீஸாா் கடைகளி... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை ஒட்டி கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 2 முதல் மே 23-ஆம் தேதி வரை வெள்ளிக்க... மேலும் பார்க்க