செய்திகள் :

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

post image

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சிராப்பள்ளி தினசரி ரயில் (எண்: 16844) மே 2-ஆம் தேதி குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம், குளித்தலை - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மேலும் இதே ரயில் (எண்: 16844) மே 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் முத்தரசநல்லூா் - திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மே 2, 6, 8 ஆகிய நாள்களில் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் (எண்: 16843) கரூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற இருவா் கைது

கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். செல்வபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செல்வபுரம் வேடப்பட்டி சாலையில் சந்தேகப்படும்... மேலும் பார்க்க

ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஜவகா் சிறுவா் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது. 5 முதல் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், அவா்களின் கல... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்தவா் கைது

பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், சூலூா் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் வேலம்மாள் (77). இவா், கோவை ... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கவன ஈா்ப்புக் கூட்டம்

ஒண்டிப்புதூா் சூா்யா நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் கவன ஈா்ப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா். கோவை ஒண்டிப்புதூா் சூா்யா நகா் பகுதியை ஒட்டியுள்ள சிவலிங்கபுரம்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை துடியலூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துடியலூா் போலீஸாா் கடைகளி... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை ஒட்டி கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 2 முதல் மே 23-ஆம் தேதி வரை வெள்ளிக்க... மேலும் பார்க்க