செய்திகள் :

ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விஜய் உத்தரவு!

post image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து அதன் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

”கட்சி விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களை நியமிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் 1. என். ஆனந்த், பொதுச் செயலாளர்,

உறுப்பினர் 2. சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி.

இக்குழுவானது, கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை நடக்கப்படும்.

இக்குழுவிற்குக் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குள்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் தங்களுக்குரிய மண்டலங்களில் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சி விதிகளின்படி உரிய நடவடிக்கைகளை, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் மேற்கொள்ளப்படும்” என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி! - முதல்வர் ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 7 வழித்தட பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் ம... மேலும் பார்க்க

உழைப்பாளர் நாள்: தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகள் அடைப்பு!

உழைப்பாளர் நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(மே 1) மதுக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் விற்பனை மதுபானக் கடைகள் அதனோடு இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதி... மேலும் பார்க்க

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தருமபுரி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கா... மேலும் பார்க்க

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க