செய்திகள் :

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

post image

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்ததால், வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த துக்கியாம் பாளையம் பாலசுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வடிவேல் (52). இவர் செவ்வாய்க்கிழமை மாலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார், கூலித் தொழிலாளியின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், தனியார் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டிற்கு சென்று, கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இவர் தற்கொலை செய்து கொண்டதாக, இவரது உறவினர்கள், புதன்கிழமை காலை வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பிச் செலுத்தக் கோரி தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால், கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி... மேலும் பார்க்க

காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ... மேலும் பார்க்க

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கு வங்க ம... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அ... மேலும் பார்க்க

கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றுப்ப... மேலும் பார்க்க