செய்திகள் :

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

post image

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகளே நிரப்பப்படுகிறது. ஆனால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் ரூ.500 நோட்டுகளை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில், அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

இதுதொடர்பாக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

செப்டம்பர் 30-க்குள் அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் 75 சதவிகிதம் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களிலும் இதனை 90 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

எடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் ரூ.500 நோட்டுகள் மட்டும் விநியோகிக்கப்படுவதால் அதனை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க

காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ... மேலும் பார்க்க

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கு வங்க ம... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அ... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புக... மேலும் பார்க்க

கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றுப்ப... மேலும் பார்க்க