செய்திகள் :

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

post image

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 23-ம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் வைகை அதிவேக விரைவு ரயிலில் ஏறி விழுப்புரத்திற்கு பயணம் செய்துள்ளார்.

தற்போதைய திருச்சி ரயில் நிலையம்

காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து ஏறிய நிலையில், அவர் பயணித்த ரயில் 9.30-க்கு திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.

அப்பொழுது, முதல் பிளாட்பாரத்தில், வசந்தம் கேட்டரிங் நிறுவனத்தில் இட்லி பார்சல் வாங்கினார். ஒரு இட்லி பார்சல் ரூ.30 என, இரண்டு பார்சல்கள் ரூ 60-க்கு வாங்கினார். ரயில் கூட்ட நெரிசல் இருந்ததால் கீழே இறங்காமல் ரயிலில் இருந்தவாறு இட்லி பார்சலை வாங்கியுள்ளார்.

அப்பொழுது, ரசீது கேட்ட போது கேண்டீன் ஊழியர் கொடுக்க மறுத்துள்ளார். மேலும், பார்சலை வாங்கி பார்த்த போது அதன் மீது எம்.ஆர்.பி விலை ரூ.26 என இருந்தது. இதனால், ஆரோக்கியசாமி விற்பனையாளரை அழைத்து எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக இரண்டு இட்லி பார்சலுக்கு ரூ.8 வாங்கி உள்ளீர்கள் என்று, அதனை திருப்பி கேட்டதற்கு விற்பனையாளர் அலட்சியமாக பேசி விட்டுச் சென்றுள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில்

மேலும் அவர், அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது சாம்பார் மட்டும் இருந்தது, சட்னி இல்லை. அளவும் குறைவாக இருந்தது. வேறு வழியில்லாமல் அதை சாப்பிட்ட ஆரோக்கியசாமி 11.40-க்கு விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர், இரயில்வே போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து, திருச்சி கோட்ட மேலாளர், கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கும் கூடுதலாக வசூலித்த 8 ரூபாய் திருப்பி வழங்க கோரி புகார் மனுவை எழுத்து பூர்வமாக அளித்துள்ளார்.

இதனை விசாரணை செய்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சம்மந்தப்பட்ட கேட்டரிங் உணவகத்திடமிருந்து ரூ.1000 அபராதம் வசூலித்துள்ளார். ஆனால், ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டிய 8 ரூபாய் கொடுக்கவில்லை.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிஷோர்குமார் மூலம் புகார் செய்தார்.

நீதிமன்றம்

எதிர்தரப்பில் வசந்தம் கேட்டரிங் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கே.சுரேஷ்பாபு, இரயில்வே சார்பில் முரளி அவர்களும் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த குறைதீர் ஆணையத் தலைவர் சதிஷ்குமார், "கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியமைக்கு, புகார் தாரருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுக்காக ரூபாய் 10,000 மற்றும் கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயும் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் கேட்டரிங் உரிமையாளர் இந்த பணத்தை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மாதம் 9 சதவிகிதம் வட்டியுடன் செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க... மேலும் பார்க்க

நிதியமைச்சர் நிர்மலா பெயரில் போலி வீடியோ; ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் நிர்வாகி.. என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததா... மேலும் பார்க்க

சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி - ராஜேஸ்வரி தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபிகா. கடந்த 30-11-2020 அன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரெ... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரைத் தாக்கி பணம், நகைகள் கொள்ளை; சக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது; என்ன நடந்தது?

கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தனது வீட்டிலிருந்தபோது இவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 3 நபர்கள் புகுந்துள்ளனர்.அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால், ஆறுமுக... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: SI-யை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு; 3 தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வருபவர் சுமையா பானு.இவரது கணவர் நாகலிங்கம். இவர், திருமயம் பெல் ஆலையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை அர... மேலும் பார்க்க