செய்திகள் :

`வங்கியில் ரூ.8 கோடி மோசடி' - மகாராஷ்டிரா அமைச்சர் மீது வழக்கு.. நடந்தது என்ன?

post image

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?

மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.

போலியான ஆவணங்களை கொடுத்து மோசடி

2004 மற்றும் 2006-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், வேறு சிலரும் சேர்ந்து போலியான ஆவணங்களை கொடுத்து மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் ரூ.8 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டது. ஆனால் கடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை. அதனை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாகிகளாக இருந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் மற்றவர்களும் எடுத்துக்கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இது தொடர்பாக பாலாசாஹேப் என்பவர் போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அம்மனு தொடர்ந்து கிடப்பில் இருந்து கொண்டிருந்தது.

இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள ரஹதா நீதிமன்றத்தில் இது தொடர்பாக பாலாசாஹேப் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டும் இம்மனுவை விசாரிக்கவில்லை. இதையடுத்து வருடங்கள் உருண்டோடின.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிராவில் உள்ள ரஹதா நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. பாலாசாஹேப் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

கோர்ட்

மோசடி வழக்கு பதிவு

அதன் அடிப்படையில், ரஹதா நீதிமன்றம் பாலாசாஹேப் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

அந்த உத்தரவை தொடர்ந்து மோசடி நடந்து 20 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது அமைச்சராக இருக்கும் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பத்மஸ்ரீ விகே பாட்டீல் உள்பட 54 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே அமைச்சர் மாணிக்கராவிற்கு கோர்ட் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை விதித்தது. ஆனால் அவர் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாநில அரசும் அவரது பதவியை பறிக்கவில்லை.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ள... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற நண்பர்கள்.. மது போதையில் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலை... மேலும் பார்க்க

மாணவிக்குப் பாலியல் தொல்லை? விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்; என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக... மேலும் பார்க்க

`இட்லி பார்சல், ரூ.8 கூடுதலாக வாங்கிய உணவகத்துக்கு ரூ.30,000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர், அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

நிதியமைச்சர் நிர்மலா பெயரில் போலி வீடியோ; ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் நிர்வாகி.. என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததா... மேலும் பார்க்க