செய்திகள் :

யானையல்ல.. குதிரை.. கோவையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர்

post image

கோவை: நான் யானை அல்ல, குதிரை என்று படையப்பா ரஜினி ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்கார்ந்திருப்பது போன்று அவரது ஆதரவாளர்கள் கோவை முழுக்க ஒட்டியிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தமிழக அரசு. அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் அவரது ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

அதில் "நான் யானை அல்ல, குதிரை... டக்குனு எழுவேன்" என்ற படையப்பா பட வசனத்துடன் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை இணைத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அண்மையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத் துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்திருந்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கோவையில் ஒட்டி உள்ள இந்த போஸ்டர்கள், அவர் விரைவில் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த போஸ்டர்கள் தற்பொழுது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தருமபுரி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கா... மேலும் பார்க்க

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க

சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!

தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைவாழ் மக்களுக்கு பாரம... மேலும் பார்க்க

60,000 பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufactur... மேலும் பார்க்க

கடலூரில் ஜன. 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு: பிரேமலதா அறிவிப்பு

தேமுதிக கட்சியின் மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பார்க்க