செய்திகள் :

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

post image

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகிக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உயர் ரக துப்பாக்கியை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

மேலும், சார்லி கலந்துகொண்ட நிகழ்ச்சியின் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர்தான், கூரையின் மேலிருந்து சார்லியை சுட்டுள்ளார் என்றும், பின்னர் அவர் தப்பியோடியதாகவும் கூறும் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு கல்லூரி மாணவராக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளத் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர், அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர்; டிரம்பின் பல கொள்கைகளுக்கு இவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோவில், நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்க முனைந்தார். அப்போது ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா சுடும் சப்தம் கேட்கிறது. அவ்வளவுதான், சார்லி சுருண்டு விழுகிறார். அந்த இடமே அமளியாகிறது. இவைதான் சம்பவத்தின்போது பதிவான விடியோவில் தெரிய வந்துள்ளது.

Rifle recovered in assassination of Trump ally Charlie Kirk, FBI says; suspect ‘college age’

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?

இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் த... மேலும் பார்க்க

நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!

நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜென்-ஸி பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர். நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும்... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் ... மேலும் பார்க்க

உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் சரிவு! முதலிடத்தில் யார்?

உலகின் முதல் பணக்காரராக லேரி எலிசன் முன்னேறியுள்ளார்.உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்றுவரையில் முதலிடம் வகித்து வந்த எலான் மஸ்க், ஒரே நாள் இரவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்குவாவில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலி... மேலும் பார்க்க