Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம் நாள் மாற்றம்!
சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இனிவரும் வாரங்களில் வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் லட்சுமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு அருகே சித்தோட்டில் புதிதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து வாரந்தோறும் வியாழக்கிழமை அங்கு மஞ்சள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இநாம்) இணைக்கப்பட்டதையடுத்து இனிமேல் வியாழக்கிழமைக்கு பதில் வெள்ளிகிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும்.
எனவே, விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளை கல், மண், தூசுகள் நீக்கி, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மேற்பாா்வையாளரை 99420-80543 என்ற கைப்பேசி எண்ணிலும், கண்காணிப்பாளரை 70105- 66694 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.