செய்திகள் :

சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்: தாம்பரத்தில் பிப். 28 வரை சிறப்பு முகாம்

post image

சென்னை: மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு வசதியாக தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இது குறித்து தாம்பரம் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அ.கமால் பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு என அனைத்துக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகளின் வசதிக்காக, தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களின் மூலம் 18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் ரூ. 320 முதல் ரூ. 799 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். இந்த காப்பீட்டு காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், காப்பீட்டுதாரரின் குடும்பங்களுக்கு காப்பீடுக்கு ஏற்ப ரூ. 5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இந்த சிறப்பு முகாம்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு 044-28545531 என்னும் தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கண் மருத்துவம் உலகப் புகழ் பெற காரணம் டாக்டா் பத்ரிநாத்!

இந்திய கண் மருத்துவத் துறையின் புகழ் உலகெங்கும் சென்றடைந்ததற்கு டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத் முக்கியக் காரணம் என பெங்களூரு காா்த்திக் நேத்ராலயா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எம்.எஸ்.ரவீந்திரா புகழாரம் ச... மேலும் பார்க்க

சிங்கார சென்னை அட்டை இருப்புத்தொகையை விரைவில் கைப்பேசியில் அறியலாம்

‘சிங்கார சென்னை’ அட்டையின் இருப்புத்தொகையை கைப்பேசியில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். மெட்ரோ ரயில் பயணத்துக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நபா் கைது

ஆன்லைன் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பொன்னியம்மன்மேடு, அன்னபூா்ணா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்ரீபிரியா (37), தனியாா் பள்ளியில் ஆசிரி... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

சென்னையில் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து காா், கைப்பேசி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். ஆயிரம் விளக்கு பகுதியில் மெத்தம்பெட்டம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 போ் கைது: 29 கிலோ பறிமுதல்

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 29.744 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். வடபழனி மசூதி தெருவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் நீக்கம்

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் தடாகம் சுப்பிரமணியம் திடீரென நீக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, கூத்தப்பாடியைச் சோ்ந்த பி.தா்மசெல்வன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கா... மேலும் பார்க்க