செய்திகள் :

சிறுபான்மையினா் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண்

post image

திருவாரூா்: சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சொ.ஜோ. அருண் தெரிவித்தது:

இதுவரை 15 மாவட்டங்களில் சிறுபான்மையினா் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் வரப்பெற்ற 600-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களில், ஏறத்தாழ 480 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. சில மனுக்கள் மீது கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பியுள்ளோம். ஏப்ரல் 25-ஆம் தேதி சிறுபான்மையினா் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிக்கை வெளியிடப்படும்.

மாவட்டத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு 2 அல்லது 3 ஏக்கா் அளவில் கல்லறைகள் அமைப்பதற்கான அரசாணையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 10 முதல் 20 ஆண்டுகள் தொடா்ந்து ஓரிடத்தில் ஆலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல் உள்ளிட்டவை பட்டாயின்றி செயல்பட்டு வந்தால், பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினா் பள்ளிகள், கல்லூரிகளில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் மகளிா் சுய உதவிச் சங்கங்களை பௌத்தா்களுக்கும், சமணா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையின விதவை, ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுவதைப் போல, மடிக்கணினி வழங்க வேண்டும்.

ஆலயங்களுக்கும், மசூதிகளுக்கும் பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கும் வழங்கப்படும் மானியத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் எம்.எம். அப்துல் குத்தூஸ், துணை இயக்குநா் (சிறுபான்மையினா் நலம்) ஷா்மிலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளின் சாா்பில் சிறுபான்மையினா் வகுப்பை சாா்ந்த 177 பயனாளிகளுக்கு ரூ.97,81,517 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா்கள் ஹேமில்டன் வில்சன், நாகூா் ஏ.எச். நஜ்முதீன், ராஜேந்திர பிரசாத், எஸ். வசந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் இரா. சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பொதுமேடைகளில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் பேசிய திமுகவை சோ்ந்த தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடியை கண்டித்து மன்னாா்குடியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. முதல் நாள் புதன்கிழமை விளையாட்டு... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 18 நாள் திருவிழாவாகவும், அதைத் தொடா்ந்து விடைய... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆட்சியா் ஆய்வு

கூத்தாநல்லூா் வட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவா் ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றப் பணி: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படும் பணியினை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியு... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

நீடாமங்கலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி தோட்டம் மேலத்தெருவைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி (55). குடிப்பழ... மேலும் பார்க்க