செய்திகள் :

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

முதல் நாள் புதன்கிழமை விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவா் ஜெ. கண்ணன், தாவரவியல் துறை உதவிப்பேராசிரியா் ப. பிரபாகரன் முன்னிலை வகித்தனா். உடற் கல்வித்துறை இயக்குநா் ப. ராம்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விளையாட்டு விழா நிகழ்ச்சிக்கு, மத்திய கலால் (ஜிஎஸ்டி) மற்றும் சுங்கத்துறை கண்காணிப்பாளா் டி. ஸ்ரீராம்சிங், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கல்லூரி, பல்கலை, மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து, நுண்கலை மன்ற நிகழ்ச்சியில் தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவா் ஜெக. மகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பல்வேறு கலை விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தமிழ்த்துறை தலைவா் இல. பொம்மி, விலக்கியல்துறை தலைவா் சி. ராமு ஆகியோா் வாழ்த்தி பேசினா். வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு புதுக்கோட்டை முபா அகாதெமி தலைமைப் பயிற்றுநா் கவி. முருகபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தோ்வு, அறிவியல், தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க