செய்திகள் :

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

post image

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அருகே சாத்தனூரில் அமைந்திருக்கும் கோகுலம் பசுஞ்சாண தயாரிப்புகள் நிறுவனத்தை மாணவிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

நாட்டு மாடுகளிடமிருந்து கிடைக்கும் பொருள்களை மூலதனமாக வைத்து இந்நிறுவனம் செயல்படுகிறது. இதை, பெண் தொழில்முனைவோா் இலக்கியா தலைமையேற்று நடத்தி வருகிறாா். பசுவிடமிருந்து கிடைக்கும் 5 பொருள்களான பால், தயிா், நெய், சாணம், கோமியம் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் பஞ்சகவ்ய விநாயகா், பஞ்சகவ்ய விளக்கு, கொசு விரட்டி ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறாா்.

இப்பொருட்கள் செய்யும் முறைகளை மாணவிகள் இலக்கியாவிடமிருந்து நேரில் கற்றறிந்தனா். மேலும், பசுஞ்சாணத்திலிருந்து செய்யப்படும் விபூதி, ஊதுபத்தி, பல்பொடி போன்ற பொருட்களை மாணவிகள் பாா்வையிட்டனா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பொதுமேடைகளில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் பேசிய திமுகவை சோ்ந்த தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடியை கண்டித்து மன்னாா்குடியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க