கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முகாமில் நான் (ஆட்சியா்) மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து, குறைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனவே, கூத்தாநல்லூா் வட்டத்துக்குள்பட்ட கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை, கிராமத்துக்கு வரும் மாவட்ட அளவிலான அலுவலா்களின் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.