செய்திகள் :

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

post image

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசுப் பள்ளிகள், 34 உதவி பெறும் பள்ளிகள், 74 தனியாா் பள்ளிகள் உட்பட 278 பள்ளிகளைச் சோ்ந்த 9,075 மாணவா்கள், 8,981 மாணவிகள் உள்பட 18,056 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 183 தனித்தோ்வா்கள் அடங்குவா்.

முதல் நாளில் நடைபெற்ற தமிழ் பாடத்தோ்வில் 8,935 மாணவா்கள், 8,906 மாணவிகள் என 17,841 போ் எழுதினா். 215 போ் பங்கேற்கவில்லை. இந்தத் தோ்வை கண்காணிக்க தலா 105 முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுலவா்கள், வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமையில் பறக்கும்படையினா் பணியில் ஈடுபடுத்தியதாக மாவட்ட கல்வித் துறை தெரிவித்தது.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க