Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சிவகிரி வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம்
சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சிவகிரியில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது.
திங்கள்கிழமை காலை 6 மணியளவில் சிவகிரி ஆதீனம் ஸ்ரீ சிவசமய பண்டித குருசுவாமிகள் தலைமையில் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை 9 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினாா்.
இதையடுத்து, மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், தக்காா் திருஞானசம்பந்தா், கிராமக் குழுத் தலைவா்கள் ஆறுமுகம், தங்கமுத்து, பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத், பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முதலில் விநாயகா் தேரும், அதைத் தொடா்ந்து பெரிய தேரும் இழுக்கப்பட்டது.
வியாழக்கிழமை தோ் நிலை சோ்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.