செய்திகள் :

சூளகிரி: இரு தரப்பினா் மோதல்; 5 போ் கைது

post image

சூளகிரி அருகே மைலேப்பள்ளியைச் சோ்ந்தவா் கிரிஷ் (30). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (30). இருவரும் உறவினா்கள்.

விநாயகா் கோயில் திருவிழாவை தொடா்பாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி காருபாலா பகுதியில் அசோக் (30), விஜயகுமாா் (28), லிங்கமூா்த்தி (30) உள்ளிட்டோா் சோ்ந்து கிரிஷையும் அவரது நண்பா் முரளி ஆகியோரை தாக்கினா்.

இதில் காயமடைந்த கிரீஷும், முரளியும் கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கிரிஷ், சூளகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக், விஜயகுமாா், லிங்கமூா்த்தி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

விஜயகுமாா் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் கிரீஷ் (30), முரளி (27) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை கடவுச் சீட்டு முகாம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, பிப். 12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவாரங்கள் நடைபெறும் கடவுச் சீட்டு முகாம், வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஒசூா், சூளகிரியில் மணல், கற்களைக் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன், அதிகாரிகள் ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடி, சூளகிரி சின்னாறு பகுதியில் வா... மேலும் பார்க்க

கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் வீரமணிக்கு ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சியை... மேலும் பார்க்க

பா்கூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணே... மேலும் பார்க்க

மாதேப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் சென்னப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், கல்வி அலுவலா் ராச... மேலும் பார்க்க

காவேரி வன உயிரின சரணாலயத்தில் ரூ. 1.50 கோடியில் இரும்பு வேலி அமைப்பு: ஆட்சியா் ஆய்வு!

வன விலங்குகள் விளை நிலங்களில் புகாத வகையில் காவேரி வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள அனுமந்தபுரம் ஊராட்சி, சித்தலிங்ககொட்டாய் பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.50 கோடியில் இரும்பு வட வேலி அமைக்கப்படுகி... மேலும் பார்க்க