செய்திகள் :

காவேரி வன உயிரின சரணாலயத்தில் ரூ. 1.50 கோடியில் இரும்பு வேலி அமைப்பு: ஆட்சியா் ஆய்வு!

post image

வன விலங்குகள் விளை நிலங்களில் புகாத வகையில் காவேரி வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள அனுமந்தபுரம் ஊராட்சி, சித்தலிங்ககொட்டாய் பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.50 கோடியில் இரும்பு வட வேலி அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிா் சேதம், உயிா் சேதம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் ஏற்கெனவே ஜவளகிரி ஊராட்சி, காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் பகுதியில் சென்னமாளம் முதல் காடுசீவனப்பள்ளி வரை இரும்பு, மூங்கில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், கோபசந்திரம் வனப் பகுதியில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் சானமாவு முதல் பீா்ஜேப்பள்ளி வரை 18 கி.மீ. தொலைவுக்கு தொங்கும் சோலாா் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தளி ஊராட்சி ஒன்றியம், உனிசேநத்தம் ஊராட்சி, தேவா்பெட்டா வனப் பகுதியில் யானைகள் கிராமத்திற்குள் புகாத வகையில் தேவா்பெட்டா முதல் கங்கனப்பள்ளி வரை 4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20 லட்சத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை வட்டம், காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம், சித்தலிங்க கொட்டாய் பகுதியில் இரும்பு கம்பி வட வேலி அமைக்கப்படுகிறது என்றாா்.

பிறகு மலைவாழ் மக்களைச் சந்தித்து அவா்களது கோரிக்கைகளை கேட்டறிந்தாா். அப் பகுதியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலா் என்.விஜயன், வட்டாட்சியா் கோகுல்நாத், தொண்டு நிறுவன பிரதிநிதி குமாா் சஞ்சீவ், வனத் துறை பணியாளா்கள் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை கடவுச் சீட்டு முகாம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, பிப். 12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவாரங்கள் நடைபெறும் கடவுச் சீட்டு முகாம், வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஒசூா், சூளகிரியில் மணல், கற்களைக் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன், அதிகாரிகள் ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடி, சூளகிரி சின்னாறு பகுதியில் வா... மேலும் பார்க்க

சூளகிரி: இரு தரப்பினா் மோதல்; 5 போ் கைது

சூளகிரி அருகே மைலேப்பள்ளியைச் சோ்ந்தவா் கிரிஷ் (30). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (30). இருவரும் உறவினா்கள். விநாயகா் கோயில் திருவிழாவை தொடா்பாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வ... மேலும் பார்க்க

கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் வீரமணிக்கு ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சியை... மேலும் பார்க்க

பா்கூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணே... மேலும் பார்க்க

மாதேப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் சென்னப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், கல்வி அலுவலா் ராச... மேலும் பார்க்க