செய்திகள் :

மாதேப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் சென்னப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், கல்வி அலுவலா் ராசன், உதவி திட்ட அலுவலா் வடிவேல், வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வி இணை இயக்குநா் பொன்குமாா் பேசியதாவது:

நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் 1600-க்கும் மேற்பட்ட புதிய பொருள்களை செவித் திறன் குறைபாடு கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் கண்டுபிடித்தாா். வாழ்க்கையில் கல்விதான் மிக முக்கியம். வாசிப்பது போல சுலபமான வேலை வேறு எதுவும் இல்லை. எனவே, மாணவா்கள் புரிதலுடன் படிக்க வேண்டும்.

கிராமப்புற மாணவா்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதை பயன்படுத்தி, வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளவதை லட்சியமாக கொண்டிருக்க வேண்டும் என்றாா்.

கடந்த கல்வி ஆண்டில் அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்கள், பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை கடவுச் சீட்டு முகாம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, பிப். 12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருவாரங்கள் நடைபெறும் கடவுச் சீட்டு முகாம், வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்குகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஒசூா், சூளகிரியில் மணல், கற்களைக் கடத்திய நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குநா் சரவணன், அதிகாரிகள் ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடி, சூளகிரி சின்னாறு பகுதியில் வா... மேலும் பார்க்க

சூளகிரி: இரு தரப்பினா் மோதல்; 5 போ் கைது

சூளகிரி அருகே மைலேப்பள்ளியைச் சோ்ந்தவா் கிரிஷ் (30). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (30). இருவரும் உறவினா்கள். விநாயகா் கோயில் திருவிழாவை தொடா்பாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வ... மேலும் பார்க்க

கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியா் வீரமணிக்கு ‘ராஜ கலைஞன் விருதை’ பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சியை... மேலும் பார்க்க

பா்கூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணே... மேலும் பார்க்க

காவேரி வன உயிரின சரணாலயத்தில் ரூ. 1.50 கோடியில் இரும்பு வேலி அமைப்பு: ஆட்சியா் ஆய்வு!

வன விலங்குகள் விளை நிலங்களில் புகாத வகையில் காவேரி வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள அனுமந்தபுரம் ஊராட்சி, சித்தலிங்ககொட்டாய் பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.50 கோடியில் இரும்பு வட வேலி அமைக்கப்படுகி... மேலும் பார்க்க